தந்தை இறந்த சோகத்தில் பிளஸ்-1 மாணவி தற்கொலை

தந்தை இறந்த சோகத்தில் பிளஸ்-1 மாணவி தற்கொலை

Update: 2021-11-23 19:40 GMT
திருச்சி, நவ.24-
திருச்சி புத்தூர் தெற்கு முத்துராஜாவீதி சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி உஷாராணி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன் சுரேஷ் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இவர்களின் இளைய மகள் தானீஸ்வரி (வயது 16). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். தந்தை இறந்தது முதல் தானீஸ்வரி மிகுந்த துக்கத்தில் இருந்துவந்தார்.
இந்தநிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர், கடந்த 21-ந்தேதி மதியம் வீட்டில் எலிகளை கொல்ல பயன்படுத்தும் பசையை தின்று மயங்கி விழுந்தார். வீட்டில் இருந்தவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தானீஸ்வரி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்