தொழிலாளி விஷம் குடித்து சாவு

நெல்லை அருகே தொழிலாளி விஷம் குடித்து இறந்தார்.

Update: 2021-11-23 20:17 GMT
நெல்லை:
நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 46). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் தோட்ட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 
இதனால் மனமுடைந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜன் நேற்று பரிதாபமாக இறந்தார். 
இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்