மாயமான இளம்பெண் கிணற்றில் பிணமாக மீட்பு

பாவூர்சத்திரம் அருகே மாயமான இளம்பெண் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார்.

Update: 2021-11-23 20:21 GMT
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே உள்ள வெள்ளப்பனையேரிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமர். இவருடைய மகள் ராஜேஸ்வரி (வயது 21). இவர் ஒரு தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக ராஜேஸ்வரி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். 
கடந்த 21-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஸ்வரியை தேடிவந்தனர்.
இந்த நிலையில் மேட்டூர் ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு கிணற்றில் ராஜேஸ்வரி பிணமாக கிடப்பதாக பாவூர்சத்திரம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்றனர். ராஜேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ராஜேஸ்வரி எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்