தொப்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி 3 பேர் படுகாயம்

தொப்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2021-11-24 05:38 GMT
நல்லம்பள்ளி:
 தர்மபுரி மாவட்டம் தொப்பூர் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது20). இவருடைய உறவினர்கள் மாதையன் (42), மணிகண்டன் (27). இவர்கள் 3 பேரும் தர்மபுரி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர். தொப்பூர் அருகே பாளையம்புதூர் பகுதியில் சென்றபோது சேலத்தில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த ஒரு லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்