காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம்

விலைவாசி உயர்வை கண்டித்து நத்தத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2021-11-24 16:03 GMT
நத்தம் : 


நத்தம் அருகே உள்ள செந்துறை சந்தைப்பேட்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதற்கு வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார். வட்டார நிர்வாகிகள் அருமைநாதன், தங்கச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தின்போது விலைவாசி உயர்வை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்