தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

நெல்லையில் தொழிலாளி மயங்கி விழுந்து இறந்தார்.

Update: 2021-11-24 19:22 GMT
நெல்லை:
நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 50). இவர் நெல்லை சந்திப்பு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இருந்து செருப்பு தைக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் இவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்