கும்மிடிப்பூண்டி அருகே பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு

கும்மிடிப்பூண்டி அருகே பெண்ணிடம் தங்கச்சங்கிலியை பறித்த 2 மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2021-11-25 10:10 GMT
கும்மிடிப்பூண்டி, 

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அடுத்த கண்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பார்வதி (வயது 35). அங்கன்வாடி சமையலர். இவர் தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணிந்தவாறு ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் பார்வதி அணிந்திருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் தீபன்ராஜ் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலில் பெண்ணிடம் இருந்து தங்கச்சங்கிலியை பறித்து சென்ற மோட்டார் சைக்கிள் நபர்கள் 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்