மின்னல் தாக்கி 19 ஆடுகள் சாவு

மூலைக்கரைப்பட்டி அருகே மின்னல் தாக்கி 19 ஆடுகள் இறந்தது.

Update: 2021-11-25 20:03 GMT
இட்டமொழி:
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள முனைஞ்சிப்பட்டி யாதவர் தெருவைச் சேர்ந்தவர் பண்டாரம் (வயது 44). இவர் சொந்தமாக ஆடு வைத்து மேய்த்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல ஆடுகளை இந்திராநகர் வண்ணான்குளம் பகுதியில் மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார்.
அப்போது இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. திடீரென மின்னல் தாக்கியதில் 19 ஆடுகள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் சித்ரா மற்றும் மூலைக்கரைப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

மேலும் செய்திகள்