பார்களில் மது விற்ற 3 பேர் கைது

பார்களில் மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-11-25 20:06 GMT
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறையில் 3 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு உள்ள பார்களில் கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் அமைத்திருந்த தனிப்படை போலீசார், அந்த பார்களில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது செந்துறை ஆலமரம் அருகே உள்ள பாரில் மது விற்ற முரளி கிருஷ்ணன், பெரிய ஏரிக்கரையில் உள்ள பாரில் மது விற்ற பாலாஜி(வயது 34), ரெயில் நிலையம் அருகே உள்ள பாரில் மது விற்ற ராஜேந்திரன்(59) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 126 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் மீது செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் வெள்ளையம்மாள் மற்றும் முருகன் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்