விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து

கன்னியாகுமரியில் தொடர் மழையால் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

Update: 2021-11-25 20:08 GMT
கன்னியாகுமரி, 
கன்னியாகுமரியில் தொடர் மழையால் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. 
 கன்னியாகுமரி
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து ரசித்து விட்டு செல்வது வழக்கம். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள். பின்னர், கடலின் நடுவே பாறையில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், அதன் அருகில் மற்றொரு பாறையில் அமைக்கப்பட்டுள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று ரசித்து விட்டு திரும்புவது வழக்கம்.
 இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகுகளை இடைவேளையின்றி இயக்கி வருகிறது. 
படகு போக்குவரத்து ரத்து
இந்தநிலையில் நேற்று காலையில் இருந்து கன்னியாகுமரியில் மழை பெய்து கொண்டிருந்தது. மேலும், சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைவாக இருந்தது. இதனால் நேற்று நாள் முழுவதும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.  மேலும், மழை காரணமாக சுற்றுலா பயணிகள் வராததால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடற்கரை சாலை, முக்கடல் சங்கமம் பகுதி ஆகிய இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

மேலும் செய்திகள்