சிறுமியை காதலித்து பலாத்காரம் செய்த வாலிபர் கைது

சிறுமியை காதலித்து பலாத்காரம் செய்த வாலிபர் கைது

Update: 2021-11-26 18:17 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா பெரியபாலிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நீதி (வயது 26). இவர் செங்கம் அருகில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியிடம் பழகி வந்தார். சிறுமியிடம் அவர், காதலிப்பதாக கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நீதியிடம் கேட்டு உள்ளார். 

அப்போது நான் உனக்கு அண்ணன் முறை வருவதாகவும், அதனால் திருமணம் செய்து கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார். 
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதியை கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த சைல்டு லைன் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அவரை, பெரும்பாக்கத்தில் உள்ள அரசு இல்லத்தில் சேர்த்தனர்.

மேலும் செய்திகள்