கீழப்பழுவூர்:
ஆந்திர மாநிலம் சந்திரபாபு காலனி பகுதியை சேர்ந்த நாகேசின் மகன் ராஜூ(25). இவரது தாய் வேம்பு அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தை சேர்ந்தவர் ஆவார். அவரை பார்ப்பதற்காக ராஜூ அங்கு வந்துள்ளார். அப்போது ஒரு சிறுமியுடன் காதல் ஏற்பட்டு, அவரை திருமணம் செய்து கொள்வதாக அழைத்துச் சென்றுள்ளார். இது குறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த கீழப்பழுவூர் போலீசார் விசாரணை நடத்தி ஆந்திரா சென்று சிறுமியை கடத்திச் சென்ற ராஜூவை கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.