பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

தாயார் சைக்கிள் வாங்கி தராததால் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டான்

Update: 2021-11-27 14:35 GMT
நல்லூர்
திருப்பூர் முத்தணம்பாளையத்தைச்சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது47) இவரது மனைவி சுமதி (44), இவர்களது மகன் சரண்சுதன் (13), 8-ம் வகுப்பு படித்து வந்தான்.குடும்பத்தகராறு காரணமாக சுமதி கணவரை பிரிந்து மகனுடன் தனியாக வசித்து வந்தார். சுமதி பகுதிநேர ஆசிரியராகவும், மாலைநேரத்தில்  பெட்ரோல் பங்கிலும் பணிபுரிந்து வருகிறார். சரண்சுதன் சைக்கிள் வாங்கி தருமாறு தாய் சுமதியிடம் அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளான். நேற்று முன்தினம் மாலை சுமதி வீட்டுக்கு வந்த போது வழக்கம் போல சைக்கிள் கேட்டு அடம்பிடித்துள்ளான். ஒரு வாரத்தில் சைக்கிள் வாங்கி தருவதாக கூறியுள்ளார். சமாதானம் ஆகாமல் சரண்சுதன் இருந்துள்ளான். அதன் பிறகு சுமதி பெட்ரோல் பங்கிற்கு வேலைக்கு சென்றுள்ளார். வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வந்து பார்த்த போது சரண்சுதன் வீட்டில் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளான் அதிர்ச்சியடைந்த சுமதி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சிறுவனை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்த போது சரண்சுதன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்