மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் சாவு

மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-11-28 20:09 GMT
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்த ரத்தினத்தின் மகன் பெரியசாமி(வயது 28). இவர் தாலுகா அலுவலகம் அருகே டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு, வீட்டிற்கு திரும்புவதற்காக மோட்டார் சைக்கிளில் தாலுகா அலுவலகம் அருகே சென்றார். அப்போது எதிரே செந்துறை நோக்கி உஞ்சினி கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி(28) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், பெரியசாமியின் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் பலத்த காயமடைந்த பெரியசாமியை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த கொளஞ்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்