திருவள்ளூர் அருகே ஏரியில் மூழ்கி கட்டிட தொழிலாளி சாவு

திருவள்ளூர் அருகே ஏரியில் மூழ்கி கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-11-29 14:24 GMT
கட்டிட தொழிலாளி

திருவள்ளூரை அடுத்த நத்தமேடு கிராமத்தை சேர்ந்தவர் சிவா (வயது 40) கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக கட்டுமான பணி பாதிக்கப்பட்டது.

போதிய வருமானம் இன்றி குடும்பம் நடத்த சிவா அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில், நேற்று காலை அவர் தண்ணீர்குளம் ஏரியில் மீன்பிடிக்க சென்றார்.

சாவு

மீன்பிடிக்க சென்ற சிவா வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் சிவாவை தேடியுள்ளனர். அப்போது ஏரியில் ஏற்கனவே மீன்பிடிக்க விரிக்கப்பட்டிருந்த வலையில் சிக்கிய அவர் ஏரியில் மூழ்கி இறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த செவ்வாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பலியான சிவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து சிவா பலியான சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்