மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-11-29 17:38 GMT
கரூர்
குளித்தலை
குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 72). இவர் நேற்று முன்தினம் குளித்தலை-மணப்பாறை சாலையில் அய்யர்மலை பகுதியில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் பாலசுப்பிரமணி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி பாலசுப்பிரமணி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்