அரசு பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கியவர் கைது

அரசு பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கியவர் கைது செய்யப்பட்டாா்

Update: 2021-11-29 17:55 GMT
கரூர்
தரகம்பட்டி
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு திருச்சி நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் செல்வராஜ் (வயது 44) என்பவர் டிரைவராகவும், கண்டக்டராக ராஜலிங்கம் (48) என்பவர் பணியில் இருந்தனர். அந்த பஸ்சில் சீத்தப்பட்டியில் இருந்து  தரகம்பட்டிக்கு செல்வதற்காக சீத்தப்பட்டி காலனியை சேர்ந்த அஜித் (24) என்பவர் ஏறி படிக்கட்டில் நின்று பயணம் செய்துள்ளார். அவரை டிரைவர் மற்றும் கண்டக்டர் மேலே வரகூறியுள்ளனர். ஆனால் அவர் மறுத்து டிரைவர் மற்றும் கண்டக்டரை தாக்கி தகாதவார்த்தையால் திட்டினார். இதனால் அவர்கள் காயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின்பேரில், சிந்தாமணிபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து டிரைவர் மற்றும் கண்டக்டரை தாக்கிய அஜித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்