மயிலம் அருகே ஓடையில் மூழ்கி விவசாயி சாவு

மயிலம் அருகே ஓடையில் மூழ்கி விவசாயி சாவு

Update: 2021-11-30 17:11 GMT
மயிலம்

மயிலம் அருகே பெரப்பந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ்(வயது 57). விவசாயியான இவர் சம்பவத்தன்று மாலை வீட்டில் இருந்து இயற்கை உபாதை கழிக்க செல்வதாக கூறிச்சென்றவர் வெகுநேரமாகியும் திரும்பி வராததால் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. 

இந்நிலையில் நேற்று வீட்டின் அருகே உள்ள ஓடையில் தேவராஜ் பிணமாக கிடந்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த உறவினர்கள் தேவராஜின் உடலை மீட்டு வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் இதுபற்றிய தகவல் அறிந்து வந்த மயிலம் போலீசார் தேவராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைத்தனர். தேவராஜ் ஓடையில் தவறி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்