காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை தற்கொலை

முகநூல் மூலம் பழகி காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-11-30 19:27 GMT
திருவெறும்பூர்,டிச.1.
முகநூல் மூலம் பழகி காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காதல் திருமணம்
திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாத்திமாநகர் 6-வது தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் சதீஷ் (வயது 29). வெளிநாட்டில் வேலைபார்த்து வந்த இவர் முகநூல் மூலம் கோவையை  சேர்ந்த ஹேமா (20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் காதலாக மாறி கடந்த 15 நாட்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான சதீஷ் மனைவி ஹேமாவிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் கொடுக்க மறுத்ததால் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்