மூதாட்டியிடம் நகை பறிப்பு
மூதாட்டியிடம் நகை பறித்தவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
சிங்கம்புணரி,
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கீழநாட்டார் ்மங்கலத்தைச் சேர்ந்த அழகர்சாமி மனைவி சுசீலா (வயது75). இவர் மகன் உதயகுமாருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் சுசீலாவிடம் 4½ பவுன் தங்க செயினை பறித்து கொண்டு சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் சிங்கம் புணரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.