திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் திடீர் தற்கொலை

திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் தூக்குப்போட்டு தற்ெகாலை செய்து கொண்டார்.

Update: 2021-12-02 19:27 GMT
சாத்தூர், 
திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் தூக்குப்போட்டு தற்ெகாலை செய்து கொண்டார்.
இளம்பெண்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அனிஷாபேகம் (வயது 49). இவருடைய மகள் சமீனா பாத்திமா (20).  இவருக்கு வருகிற 12-ந் தேதி திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. 
இந்தநிலையில் இவர் அடிக்கடி செல்போனை பயன்படுத்தி வந்ததாகவும், இதனை தாயார் அனிஷாபேகம் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
தற்கொலை
இதனால் மனவருத்தம் அடைந்த சமீனா பாத்திமா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இதுகுறித்து தகவல் அறிந்த அப்பநாயக்கன்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அனிஷாபேகம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்