சுவர் இடிந்து கன்றுக்குட்டி சாவு

சுவர் இடிந்து கன்றுக்குட்டி செத்தது.

Update: 2021-12-02 20:00 GMT
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள நூத்தப்பூரை சேர்ந்தவர் தூண்டி (வயது 50). இவர் தனது வயலில் பட்டி அமைத்து மாடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் வேப்பந்தட்டை பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக நேற்று பட்டியின் சுவர் இடிந்து விழுந்தது. அப்போது அங்கு கட்டப்பட்டிருந்த கன்றுக் குட்டி ஒன்று இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக செத்தது. இந்த சம்பவம் தொடர்பாக கை.களத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்