ரூ.70 ஆயிரம் திருட்டு

ரூ.70 ஆயிரம் திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-12-03 17:32 GMT
சிவகங்கை, 
சிவகங்கையை அடுத்த எம்.நெடுங்குளத்தை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது45). நேற்று இவர் சிவகங்கை மதுரை ேராட்டில் உள்ள ஒரு  வங்கியில் பணம் எடுத்து மோட்டார் சைக்கிளில் வைத்துகொண்டு சிவகங்கை நேரு பஜாரில் உள்ள ஒரு கடைக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளில் வைத்துஇருந்த ரூ.70 ஆயிரத்தை காணவில்லையாம். இது குறித்து சிவகங்கை நகர் குற்றபிரிவு போலீசில் அவர் புகார் அளித்தார். இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் மருதுபாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா வீடியோ காட்சிகளை பார்த்தபோது 2 பேர் பணத்தை எடுத்து செல்வது பதிவாகி உள்ளது.அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்