தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2021-12-03 17:56 GMT
புதுக்கடை, 
புதுக்கடை அருகே உள்ள வேங்கோடு பகுதியை சேர்ந்தவர் சூசை மைக்கேல். இவரது மகன் டெல்பின் பாபு (வயது38), கூலி தொழிலாளி. திருமணம் ஆகாதவர். இவருக்கு மது பழக்கம் இருந்ததாக தெரிகிறது. மேலும், மது குடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் டெல்பின் பாபு தனது தாயிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் தாயார் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் மனமுடைந்த டெல்பின் பாபு வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்