உயர் மின் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டம்

விருதுநகர் அருேக செல்போன் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-12-03 19:24 GMT
விருதுநகர்,
விருதுநகர் அருகே மீசலூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் விவசாயிகள் போராட்டக் குழு மற்றும் விவசாயிகள் நாராயணசாமி நாயுடு நலச்சங்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி உயர் மின் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினர். விருதுநகரில் இருந்து திருவண்ணாமலை வரை 765 கிலோவாட் மின் பாதை அமைக்கும் பணியை ஐகோர்ட்டு உத்தரவுபடி நிறுத்தி வைக்க வேண்டும். உயர் மின் கோபுரம் அமைக்கும் இடத்தில் 200 சதவீத இழப்பீடு மின்கம்பி செல்லும் பாதையில் 100 சதவீத இழப்பீடு, பாதிக்கப்பட்ட மரங்களுக்கு அரசு ஆணையின் படி இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது. விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் ஈசன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்