ஓட்டல் தொழிலாளியை தாக்கிய 2 ரவுடிகள் கைது

ஓட்டல் தொழிலாளியை தாக்கிய 2 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-12-04 21:14 GMT
மதுரை,

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் போத்திராஜ் (வயது 42). இவர் பெரியார் பஸ்நிலையம் அருகே உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் வேலை முடிந்து கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 2 வாலிபர்கள், போத்திராஜிடம் சிகரெட் மற்றும் பணம் கேட்டனர். அப்போது அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டு அவர் தாக்கப்பட்டார். மேலும் அவர்கள் போத்திராஜை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து தப்பி செல்ல முயன்றனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த போலீசார் அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். அதில் மேலமாசி வீதியை சேர்ந்த ஆதித்தன் (23), செல்லூர் மணவாளன் நகரை சேர்ந்த வெங்கட்பிரபு (21) என்பதும், ரவுடிகளான இவர்கள் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன என்பதும், கடந்த 30-ந் தேதி தான் ஒரு வழக்கில் ஜாமீனில் வெளியே வந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்