பெண் திடீர் சாவு

பணகுடி அருகே பெண் திடீரென்று இறந்தார்.

Update: 2021-12-07 19:47 GMT
பணகுடி:

பணகுடியை அடுத்த கலந்தபனையை சேர்ந்தவர் ஜான்சன் கூலி தொழிலாளி. இவருடைய மனைவி செலின் (வயது 40). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். செலினுக்கு கடந்த 10 வருடங்களாக மூச்சுத்திணறல் நோய் இருந்து வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று காலை மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் ஜான்சன் தன்னுடைய மனைவி செலினை சிகிச்சைக்காக அஞ்சுகிராமத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறினார். 

தகவல் அறிந்ததும் பணகுடி போலீசார் செலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்