ரவுடிகள் உள்பட 3 பேர் கைது

மதுரையில் வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடிகள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-12-07 20:21 GMT
மதுரை, 
மதுரையில் வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடிகள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மிரட்டல்
மதுரை ஆனையூர் தமிழ்நகரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 40). சம்பவத்தன்று இவர் மீன் வாங்குவதற்காக கூடல்புதூர் பகுதிக்கு சென்றார். அப்போது 2 பேர் அவரை வழி மறித்தனர். பின்னர் அவர்கள் கத்தி, அரிவாளை காட்டி கார்த்திகை மிரட்டி அவரிடம் இருந்த 500 ரூபாயை பறித்து கொண்டு தப்பினர். 
அப்போது அந்த வழியாக ரோந்து வந்த கூடல்புதூர் போலீசார் அவர்கள் 2 பேரையும் பிடித்து விசரித்தனர். அதில் உசிலம்பட்டியை சேர்ந்த ரவுடி செல்வம் (26), தங்கராமன் (19) என்பது தெரியவந்தது. 
பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
கைது
அதே போன்று எல்லீஸ்நகர் வாகன காப்பகம் அருகே விளாச்சேரியை சேர்ந்த ஜான் (28) என்பவரை சம்மட்டி புரத்தை சேர்ந்த ரவுடி பார்த்தசாரதி (28) கத்தியை காட்டி வழிமறித்தார். 
பின்னர் அவரிடம் இருந்து 2,400 ரூபாயை பறித்தார். 
பின்னர் பார்த்தசாரதி பழங்காநத்தம் சென்று அந்த பகுதியில் ஒருவரிடம் பணம் பறித்துள்ளார். 
இது குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்