வாலிபர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-12-08 05:10 GMT
மதுரை, 
மதுரை கரிமேடு, ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் அந்தோனி. அவரது மகன் மணி என்ற கிறிஸ்டி (வயது 27). நகரில் உள்ள போலீஸ் நிலையங்களில் இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த்சின்கா உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்