காவலாளி உள்பட 2 பேர் தற்கொலை

காவலாளி உள்பட 2 பேர் தற்கொலை

Update: 2021-12-08 18:58 GMT
திருச்சி, டிச.9-
திருச்சி அரியமங்கலம் முத்துப்பிள்ளை வீதியை சேர்ந்த பாலகிருஷ்ணனின் மகன் சந்தோஷ்குமார் (வயது 36) குடும்பத்தகராறு காரணமாக வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுசிலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதுபோல், திண்டுக்கல் லைன்வீதியை சேர்ந்தவர் மகாலிங்கம் (60). கடந்த 15 ஆண்டுகளாக குடும்பத்தை பிரிந்து வசித்து வந்த இவர், திருச்சி திருவானைக்காவலில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர், தான் தங்கி இருந்த அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்