பெண் தூக்குப்போட்டு தற்கொலை

ஆரணி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை போலீசில் புகார் செய்தார்.

Update: 2021-12-13 18:13 GMT
ஆரணி

ஆரணி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை போலீசில் புகார் செய்தார்.

 பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிைய அடுத்த எஸ்.யூ.வனம் கிராமத்தை சேர்ந்தவர் பாபு, கூலித்ெதாழிலாளி. இவர், ஆரணியில் உள்ள சுவீட் பேக்கரி கடையில் கூலி வேலை பார்த்து வருகிறார். 

இவருக்கும், சந்தவாசலை அடுத்த முனியன்குடிசை பகுதியை சேர்ந்த ஜெயராமனின் மகள் சீதா (வயது 28) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 

ஆனால் அவர்களுக்கு குழந்தை இல்லை. குழந்தை இல்லாத ஏக்கத்தாலும் அடிக்கடி ஏற்பட்டு வந்த குடும்ப தகராறாலும் மனமுடைந்து காணப்பட்ட சீதா நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது தனது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 சாவில் சந்தேகம்

தகவல் அறிந்ததும் ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி சீதாவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஆரணி தாலுகா போலீசில் சீதாவின் தந்தை ஜெயராமன் புகார் செய்தார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் போலீசார் மர்மச்சாவாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தற்கொலை செய்து கொண்ட சீதாவுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆவதால் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் கவிதா மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்