பாம்பு கடித்து மூதாட்டி பலி

ஆண்டிப்பட்டி அருகே பாம்பு கடித்து மூதாட்டி ஒருவர் பலியாகினார்.

Update: 2021-12-15 14:59 GMT
ஆண்டிப்பட்டி: 

ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்தனம்பட்டி கிராமத்தை சேர்ந்த குபேந்திரன்  மனைவி இந்திராணி (வயது 60). இந்நிலையில் நேற்று முன்தினம் குபேந்திரனும், அவரது மனைவியும் வீட்டுக்கு வெளியே உட்கார்ந்திருந்தனர். குபேந்திரன் சாப்பாடு வாங்குவதற்காக ஓட்டலுக்கு சென்றார். அப்போது அங்கு வந்த பாம்பு ஒன்று இந்திராணியை கடித்ததாக கூறப்படுகிறது. 

அதில் மயங்கி கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக  தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், இந்திராணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்