நீடாமங்கலம், வடுவூர் பகுதிகளில் மின் நிறுத்தம்

மின் நிறுத்தம்

Update: 2021-12-19 12:48 GMT
நீடாமங்கலம்:-

வடுவூர் மற்றும் கோவில்வெண்ணி துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதன் காரணமாக அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சாத்தனூர், வடுவூர், நெய்வாசல், புள்ளவராயன்குடிகாடு, நீடாமங்கலம், நகர், காளாச்சேரி, கோவில்வெண்ணி, முன்னாவல்கோட்டை, மேலபூவனூர், நத்தம், ஆதனூர், சோனாப்பேட்டை, கொட்டையூர், அம்மாப்பேட்டை, கருப்ப முதலியார்கோட்டை, மணக்கால், அரித்துவாரமங்கலம், சித்தமல்லி, மாணிக்கமங்கலம், கிளியூர், சேர்மாநல்லூர், முனியூர், அவளிவநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் செங்குட்டுவன் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்