தீக்குளித்த வியாபாரி சாவு

தேனி பஸ்நிலைய பூங்காவில் தீக்குளித்த வியாபாரி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Update: 2021-12-20 15:29 GMT
தேனி: 

தேவாரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பாண்டி (வயது 48). இவர் கோவையில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவர் தனது குடும்பத்துடன் கோவையில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இவர் தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையத்தில் உள்ள பூங்காவில், தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். 

இதில் படுகாயம் அடைந்த அவர் உடல் கருகிய நிலையில் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இரவில் உயிரிழந்தார். 

கடன் தொல்லை மற்றும் குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தீக்குளித்ததாக விசாரணையில் தெரியவந்தது. அவருடைய மனைவி பிரியா கொடுத்த புகாரின் பேரில் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்