சொத்து தகராறில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு

சொத்து தகராறில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

Update: 2021-12-23 18:59 GMT
கீரமங்கலம், 

கீரமங்கலம் அருகே உள்ள பனங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 63), விவசாயி. நேற்று முன்தினம் இரவு இவருக்கும் அவரது உறவினரான துரையரசன் (45) என்பவருக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டது. இதில், அவர்கள் 2 பேரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதில், ஆத்திரம் அடைந்த துரையரசன் தான் வைத்திருந்த அரிவாளால் தமிழரசனை தலை மற்றும் கைகளில் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, பலத்த காயம் அடைந்த தமிழரசனை அப்பகுதி மக்கள் மீட்டு அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்தநிலையில், தமிழரசன் மற்றும் அவரது மனைவி லட்சுமி (55) ஆகியோர் தாக்கியதாக கூறி துரையரசன் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கீரமங்கலம் போலீசார் இருதரப்பை சேர்ந்த 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்