6½ பவுன் நகை திருட்டு

6½ பவுன் நகை திருட்டு

Update: 2021-12-25 19:15 GMT
மணப்பாறை சிதம்பரம்பட்டி பாலம்மாள் தெருவைச் சேர்ந்தவர் ஷாஜகான் (42). இவர் கடந்த சில மாதங்களாக சென்னையில் உள்ளார். இவரது வீடு பூட்டப்பட்ட நிலையில் நேற்று வீட்டிற்கு வந்து பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 6½ பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் திருட்டு போய் இருந்தது. இது குறித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

மேலும் செய்திகள்