2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட 2 ஆசிரியர்கள் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Update: 2021-12-27 17:49 GMT
ராமநாதபுரம், 

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட 2 ஆசிரியர்கள் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

பாலியல் தொல்லை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள ஒரு அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக அறிவியல் ஆசிரியர் ராமராஜா, கணினி ஆசிரியர் ஆல்பர்ட் வளவன் பாபு ஆகியோர் மீது அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக ராமராஜாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள ஆர்பர்ட் வளவன் பாபுவை போலீசார் தேடிவருகின்றனர். 

2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து நடவடிக்கை மேற்கொண்டு, மேற்கண்ட 2 ஆசிரியர்களையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்