தர்மபுரி அருகே குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

தர்மபுரி அருகே குடும்பத்தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-01-02 16:35 GMT
தர்மபுரி:
தர்மபுரி அருகே குடும்பத்தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குடும்பத்தகராறு
தர்மபுரி கோட்டை ஜாகிர் தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி லாவண்யா (வயது 32), இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் பென்னாகரம் சாலையில் ஓட்டல் நடத்தி வந்தனர். 
இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக ஓட்டலில் சரியாக வியாபாரம் இல்லை என கூறப்படுகிறது. மேலும் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. புத்தாண்டு தினமான நேற்று முன்தினம் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
பெண் தற்கொலை
இதனால் மனமுடைந்த லாவண்யா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் ெதரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று லாவண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்