மோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்; 2 பேர் பலி

கண்ணமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள்-மொபட் மோதிக்கொண்டதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயம் அடைந்தார்.

Update: 2022-01-03 18:05 GMT
கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள்-மொபட் மோதிக்கொண்டதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயம் அடைந்தார். 

 மோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள காட்டுக்காநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி. அவரது மகன் பாலாஜி (வயது 25). இவா், தனது தாத்தாவின் ஈமச்சடங்குக்காக பொருட்கள் வாங்க மோட்டார் சைக்கிளில் ரெட்டிபாளையம் சாலையில் வந்து கொண்டிருந்தார். 

அப்போது எதிரே காட்டுக்காநல்லூர் ஊராட்சியில் மன்னாய்க்கன் பாளையம் பகுதியில் வசிக்கும் சுரேஷ் (40) மற்றும் அவரது நண்பர் கோவிந்தராஜ் ஆகியோர் மொபட்டில் ரெட்டிபாளையம் நோக்கி சென்றனர்.  
அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளும், மொபட்டும் மோதிக்கொண்டன. 

 2 பேர் பலி

இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பாலாஜி, சுரேஷ் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். கோவிந்தராஜ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்