மண்டபம் மீனவர்கள் 12 பேருக்கு மேலும் 2 நாள் காவல் நீட்டிப்பு

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டமண்டபம் மீனவர்கள் 12 பேருக்கு மேலும் 2 நாள் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-01-03 18:20 GMT
ராமேசுவரம், 

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து கடந்த மாதம் தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 2 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்கள் மன்னார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 12 நாட்களுக்கு மேலாக இலங்கை சிறையில் தவிக்கும் அந்த 12 பேரும் நேற்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 12 மீனவர்களையும் நாளை(5-ந்தேதி) வரையிலும் மீண்டும் 2 நாள் சிறையில் அடைக்க காவல்நீட்டிப்பு செய்து நீதிபதி உத்தரவிட்டார். அதை தொடர்ந்து 12 மீனவர்களும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஏற்கனவே ராமேசுவரம் மீனவர்கள் 43 பேருக்கு காவல் நீட்டிப்பு செய்து இலங்கை சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்