2000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

அரகண்டநல்லூர் அருகே 2000 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

Update: 2022-01-04 17:37 GMT
திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே வீரபாண்டி கிராமத்தில் அரகண்டநல்லூர் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள மலை பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக 6 பேரல்களில் 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த சாராய ஊறலை கீழே கொட்டி போலீசார் அழித்தனர். மேலும் இது தொடர்பாக மணிவிளக்கு, ரவிச்சந்திரன் மற்றும் முருகன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்