கடத்தூரில் மோட்டார் சைக்கிள்கள் மோதல் கல்லூரி மாணவர் பலி

கடத்தூரில் மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார்.

Update: 2022-01-05 16:37 GMT
கடத்தூர்:
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் வன்னியர் தெருவை சேர்ந்தவர் பன்னீர். இவர் கடத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவராக உள்ளார். இவரது மகன் லோகேஷ்குமார் (வயது 19). இவர் தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இவர் மோட்டார் சைக்கிளில் கடத்தூர் மின்வாரிய அலுவலகம் அருகே சென்றபோது முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் லோகேஷ்குமார் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது மாணவர் வழியிலேயே இறந்துவிட்டது தெரியவந்தது. இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்