கார் பட்டறை உரிமையாளரை தாக்கிய 6 பேர் மீது வழக்கு

வேலாயுதம்பாளையம் அருகே கார் பட்டறை உரிமையாளரை தாக்கிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-01-06 18:56 GMT
வேலாயுதம்பாளையம், 
முன்விரோதம்
வேலாயுதம்பாளையம் அருகே காந்தி நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 34). இவர் தவிட்டுப்பாளையம் அருகே கார் பட்டறை நடத்தி வருகிறார். இந்தநிலையில் ராஜாவும் அவரது உறவினரான மணிகண்டனும் பட்டறையில் இருந்தனர்.
அப்போது தவிட்டுப்பாளையம் பகுதிகளை சேர்ந்த யுவராஜ், விமல், கோவை காந்தி, சங்கர் உள்பட 6 பேர் அங்கு வந்தனர். மணிகண்டனுக்கும், யுவராஜுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து உள்ளது.
கொலை மிரட்டல்
இதை மனதில் வைத்துக்கொண்டு அவர்கள் 6 பேரும் மணிகண்டனையும், ராஜாவையும் தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். பின்னர் அவர்கள் ராஜா மற்றும் மணிகண்டனை மட்டையால் கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், பட்டறைக்குள் நிறுத்தி இருந்த காரின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். 
அதனைத் தொடர்ந்து பட்டறையில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் மற்றும் ராஜா பாக்கெட்டில் இருந்த ரூ.2 ஆயிரத்தையும் எடுத்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
6 பேர் மீது வழக்கு
இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசில் ராஜா புகார் அளித்தார். இதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து தகராறில் ஈடுபட்டு கார் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்திய யுவராஜ், விமல், கோவை காந்தி, சங்கர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்