முதியவருக்கு அரிவாள் வெட்டு

சுரண்டை அருகே முதியவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

Update: 2022-01-06 20:12 GMT
சுரண்டை:
சுரண்டை சிவகுருநாதபுரத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ் (வயது 60). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். இவர் சம்பவத்தன்று வீரசிகாமணியில் இருந்து சுரண்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். குலையநேரி அருகில் சென்றபோது, அவரை மர்மநபர் வழிமறித்து அரிவாளால் வெட்டினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த சுபாஷ் சந்திரபோசை தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சுபாஷ் சந்திரபோஸ் 2-வதாக மற்றொரு பெண்ணை திருமணம் செய்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் கணவர், சுபாஷ் சந்திரபோசை அரிவாளால் வெட்டியதும் தெரிய வந்தது. இதையடுத்து தலைமறைவான அந்த நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்