திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 444 பேர் பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Update: 2022-01-07 16:27 GMT
இந்த நிலையில் கொரோனா தொற்றால் நேற்று 444 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 883 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

இதில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 916 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 1,102 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் கொரோனா தொற்றால் 1,865 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்