மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

காரைக்குடி அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.

Update: 2022-01-08 17:50 GMT
காரைக்குடி,

காரைக்குடி அருகே உள்ள வேலங்குடியை சேர்ந்தவர் பாலு (வயது 34). கட்டிட தொழிலாளி. இவர் முத்துபட்டணத்தில் உள்ள ஒரு வீட்டில் 2-வது தளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது சென்ட்ரிங் கம்பியை இழுக்கும் போது தவறுதலாக அருகே சென்ற மின் கம்பி மேல் பட்டது. இதில் மின்சாரம் தாக்கி நிலைகுலைந்த பாலு கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி  அவர் உயிரிழந்தார். இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்