கொரோனா தடுப்பூசி முகாம்

சீர்காழி நகர் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாமை நகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்.

Update: 2022-01-09 17:23 GMT
சீர்காழி:
சீர்காழி நகர் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாமை நகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்.
கொரோனா தடுப்பூசி முகாம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட தென்பாதி, கொள்ளிடம் முக்கூட்டு முருகன் பூங்கா, பிடாரி வடக்கு வீதியில் உள்ள வாணி விலாஸ் பள்ளி ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.  இந்த முகாமில் சீர்காழி நகர் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இந்த முகாமை நகராட்சி ஆணையர் பட்டுசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் விவரங்களை கேட்டறிந்தார். 
அப்போது வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்மோகன், நகராட்சி மேலாளர் அப்துல்காதர், சுகாதார பணியாளர்கள், நகராட்சி பணியாளர்கள் உள்பட பலர் உடனிருந்தனர். இதேபோல் சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி் கொண்டனர்.

மேலும் செய்திகள்