தொழிலாளி திடீர் சாவு

சிவகிரியில் தொழிலாளி திடீரென்று இறந்தார்.

Update: 2022-01-09 19:17 GMT
சிவகிரி:

சிவகிரி அண்ணா தெற்கு தெருவைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் புத்தர் என்ற முருகன் (வயது 33). கரும்பு வெட்டும் கூலி தொழிலாளியான இவருக்கு திருமணம் முடிந்து 2 வருடங்கள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. நேற்று முன்தினம் சிவகிரிக்கு வடக்கே குமாரபுரம் பகுதியில் தனியார் தோட்டத்தில் கரும்பு வெட்டிக் கொண்டிருந்தார். 

அப்போது திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறி மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறிது நேரத்தில் முருகன் இறந்தார். இதுகுறித்து சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்