சாலை விபத்தில் படுகாயம் அடைந்த முதியவர் சாவு

சாலை விபத்தில் படுகாயம் அடைந்த முதியவர் இறந்தார்.

Update: 2022-01-10 17:59 GMT
கரூர்
நொய்யல்,
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே அன்னியூர் புதுகுளத்தாங்கரை தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 63). இவர் கரூர் மாவட்டம் தவுட்டு பாளையத்தில் இருந்து தோட்டக்குறிச்சி செல்லும் சாலையில் உள்ள ஒரு செங்கல் தயாரிக்கும் நிறுவனத்தில் செங்கல் அறுக்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் கணேசன் தனது மோட்டார் சைக்கிளில் தோட்டக்குறிச்சி கடை வீதிக்கு சென்று பொருட்களை வாங்கிக்கொண்டு திரும்ப வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். 
அப்போது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கணேசனின் தம்பி மகள் முத்துதமிழ்செல்வி கொடுத்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்