விஷம் குடித்து மின்வாரிய ஊழியர் தற்கொலை

விஷம் குடித்து மின்வாரிய ஊழியர் தற்கொலை

Update: 2022-01-10 20:27 GMT
பேரையூர்
பேரையூர் தாலுகாவில் உள்ள பூசலபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 40) இவருடைய மனைவி சுமதி(35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ரமேஷ் சின்னகட்டளையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின்பாதை ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். ரமேஷ், சுமதி இடையே குடும்ப தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ரமேஷ் விஷம் குடித்துள்ளார். இதையடுத்து ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் அவர் பரிதாபமாக இறந்தார். .இது குறித்து சேடபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்